தொடக்கம்
முடிவின் பயணம்
தொடங்கிவிட்டது
அதன் வாலைப் பிடித்தபடியே
பின்தொடரும் எனது
வழி…
ஒற்றையடிப் பாதையாய்
குறுகலான செடிப்புதர்களாய்
மேடும் பள்ளமுமாய்
கற்களும் முற்களுமாய்
அவ்வப்போது அகன்ற
சாலையும்…
சுவடுகளைத் திரும்பிப்
பார்க்க மனமின்றி
பயணிக்கும் எனது
மூர்க்கம்
வேட்கை தணிந்து
இளைப்பாறுவது எப்போது….?
மேனா.உலகநாதன்