Tuesday, February 22, 2011


நன்றாகவே….

சில மௌனங்கள்
பல புறக்கணிப்புகள்

பாடம் நடத்தியபடியே
நகர்கிறது காலம்.

இலையுதிர்கால மரத்தில் இருந்து
உதிரும் உயிர்த்துளி
வெள்ளமெனப் பெருகிப் பரவ
துளிர்க்கும்
பசித்த மானுடம்

வசந்தம் சூல்கொள்ளும்
பூக்களின் தேன் துளி
விஷமெனக்
கரைந்து கொல்லும்
விதி எனும்
கற்பிதத்தை

வீழும்போதே எழும் எமது வீறுதனில்
மோதிச்சிதறும் அவர்தம் உன்மத்தம்

எது நடந்ததோ
அது
நன்றாகவே நடந்தது.

மேனா. உலகநாதன்