நெருடல்
-----------------------------------------------------------------------
அவரைப் பார்த்தும்
பாராதவனாய்த் திரும்பிக் கொண்டேன்
பார்க்காமல் போகிறார்
என்பதைப் பார்க்காமல்
பார்த்திருக்கலாம்தான்
கேள்வியும் பதிலும்
உள் நெருடியது
பார்த்தும் பாராமையை
பார்த்தும் பாராமல் சென்ற
அவரின் பக்குவம் பார்த்தும்
பாராத நான்.
மேனா. உலகநாதன்
No comments:
Post a Comment