Tuesday, December 7, 2010


நெருடல்
-----------------------------------------------------------------------

அவரைப் பார்த்தும்
பாராதவனாய்த் திரும்பிக் கொண்டேன்

பார்க்காமல் போகிறார்
என்பதைப் பார்க்காமல்
பார்த்திருக்கலாம்தான்

கேள்வியும் பதிலும்
உள் நெருடியது

பார்த்தும் பாராமையை
பார்த்தும் பாராமல் சென்ற
அவரின் பக்குவம் பார்த்தும்
பாராத நான்.  

மேனா. உலகநாதன்






No comments:

Post a Comment